தனிமைப்படுத்த பட்ட பகுதியில் உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை!!
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எந்த சூழ்நிலையிலும் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மருத்துவ உதவி தேவைப்படும் கொரோனா தொற்று அறிகுறி கொண்டவர்கள் மட்டும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளுக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அவசியம் ஏற்படின் பொலிஸாரின் அனுமதி பெறப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படும் வரை வேலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அறிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை