கொரோனா தாக்கம் மட்டக்களப்பில் அதிகரிப்பு!

 


மட்டக்களப்பு நகரில் இன்று இனங்காணப்பட்ட  கொரோனா தொற்றாளரின் மூன்று குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு லொயிட்ஸ் வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை உள்ள ஒருவருக்கு  கோரோனா தொற்று இனங்காணப்பட்டது.

இவர் செங்கலடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றிவரும் நிலையில் எதேச்சையாக மேற்கொள்ளப்பட்ட  பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் இவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த அடிப்படையில் இன்று காலை அவரை சுகாதார பிரிவினர் இன்று சிகிச்சைக்காக அழைத்துச்சென்ற அதேவேளை குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு  பி.சி.ஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த நபரின் மனைவி மற்றும் 16வயதுடைய மகள்,13வயதுடைய மகன் ஆகியோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன் இன்னொரு மகனான 20வயதுடைய மகனுக்கு தொற்று ஏற்படவில்லையெனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த குடும்பத்துடன் தொடர்புகளை பேணியவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் சுகாதார பிரிவினரிரை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.