பெற்ற தாயே குழந்தைகளுக்கு நஞ்சூட்டிய அவலம்!!

 


திருகோணமலை – உப்புவெளி, புளியங்குளம் பகுதியில் தாயொருவர் தனது நான்கு பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டி தாமும் நஞ்சருந்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் 16 வயதான சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தாய் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் 8, 10, 12 வயதான மூன்று பெண் பிள்ளைகளுக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

குடும்பத்தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.