ரி-20 உலகக்கிண்ண தொடரில் நடராஜன் விளையாட வேண்டும்!


ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரில், தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகருமான விவிஎஸ் லக்ஷ்மண் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அடுத்த வருடம் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இறுதி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக் கூடிய ஒருவர் இந்திய அணிக்குத் தேவை. கடைசி ஓவர்களில் ஷமியும் சைனியும் நன்றாக வீசுவதைப் பார்ப்பது நன்றாக உள்ளது. இடது கை பந்துவீச்சாளராக இருப்பதால் எதிரணிக்கு நடராஜனால் ஆச்சர்யம் அளிக்க முடியும்.

ஐபிஎல் தொடரில் புவனேஸ்வர் குமாருக்குக் காயம் ஏற்பட்ட பிறகு கலீல் அஹமத்துக்கு வாய்ப்பளிப்பதை விடவும் நடராஜனுக்கே முன்னுரிமை அளித்தோம். பயிற்சியின்போது அற்புதமாகப் பந்துவீசி நம்பிக்கை ஏற்படுத்தினார்.

யோர்க்கர் பந்தை விடவும் வேறு விதமாகவும் அவரால் சிறப்பாகப் பந்துவீச முடியும். ஆனால் அதை ஐபிஎல் தொடரில் அவர் பயன்படுத்தவில்லை. கூர்மையான பவுன்சர், ஸ்லோ போல், ஓஃப் கட்டர் என பலவகைப் பந்துகளை அவரால் வீச முடியும். மிகவும் கடினம் என எண்ணக்கூடிய யோர்க்கர் பந்துகளை மிகுந்த நம்பிக்கையுடன் வீசுவார்” என கூறினார்.

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ரி-20 தொடரில் முதல்முறையாக இடம்பெற்றுள்ள தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை 2017ஆம் ஆண்டு 3 கோடிக்குத் பஞ்சாப் அணி தேர்வு செய்தது. அதன்பிறகு அடுத்த வருடம் சன்ரைசர்ஸ் அணி 40 லட்சத்துக்குத் தேர்வு செய்தது.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரிலிலேயே அவருக்கு முழுமையாக விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதில் மிகச் சிறப்பாக யோர்க்கர் பந்துகளை வீசி அனைவரினதும் கவனத்தை ஈர்த்த நடராஜன், 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 71 யோர்க்கர் பந்துகளை வீசியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.