இந்தியாவில் 3 பேர் சுட்டு கொலை!


சென்னை யானை கவுனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தந்தை தலில் சந்த், தாய் புஷ்பாபாய், மகன் ஷீத்தல் ஆகியோரின் சடலங்களே சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தானைச் சேர்ந்த தலில் சந்த் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவர் சென்னையில் அவரது மனைவி புஷ்பா, மகன் ஷீத்தல், மகள் பிங்கியுடன் சௌகார்பேட்டையில் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று மாலை வெளியே சென்றிருந்த தலில் சந்த்தின் மகள் பிங்கி, வீடு திரும்பியபோது, பெற்றோரும் சகோதரரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு கிடந்ததைக் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சிசிடிவி கேமரா காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்ததில், தலில் சந்தின் வீட்டிலிருந்து ஒருவர் ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தநிலையில் குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.