களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திடீர் உயிரிழப்பு!!

 


மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார், தனது 60ஆவது வயதில் இன்று (01.11.20) திடீரென உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 12.30 மணி வரைக்கும் களுவாஞ்சிகுடி பகுதியில், கடமையில் ஈடுபட்டிருந்த அவர், பாண்டிருப்பில் அமைந்துள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், திடீர் சுகயீனம் ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அதிகாலை 03 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சடலம், கல்முனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த வைத்திய அதிகாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.