கடற்கரையில் ஒதுங்கிய டொல்பின்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

 


இந்திய கடற்பகுதியில் பலம்வாய்ந்த நாடுகளின் கடற்படைகளால் நடத்தப்பட்ட போர் பயிற்சியே கொழும்பு – பாணந்துறை கடற்கரையில் நூற்றுக்கணக்கான டொல்பின்கள் கரையொதுங்கியமைக்கான காரணம் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்த கடற்படை பயிற்சிகளில் அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுறு சூரியபண்டார கூறுகையில், அந்த பயிற்சியில் இலங்கை கடற்படையினர் தொடர்புபடவில்லை என்று கூறினார்.

இலங்கை கடற்பகுதியில் அந்தப் பயிற்சிகள் இடம்பெறவும் இல்லை என குறிப்பிட்ட அவர், அப்படியொரு பயிற்சி இடம்பெற்றது என்பதை உறுதி செய்தார்.

இதேவேளை, பாணந்துறை கடற்கரையில் ஒதுங்கிய டொல்பின் களில் 10 மீன்கள் வரை உயிரிழந்ததோடு ஏனைய மீன்கள் பொதுமக்கள் மற்றும் கடற்படை உதவியுடன் மீண்டும் கடலுக்கு தள்ளிவிடப்பட்டன.

இந்த நிலையில் உதவிய அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.