தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி!

 


மதுரை தீ விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்சம் ரூபாய் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரச வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை தெற்குமாசி வீதியிலுள்ள ஜவுளிக்கடை ஒன்றில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், குறித்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இதன்போது குறித்த இடிபாடுகளிலில் சிக்கிய தீயணைப்பு வீரர்களான சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையிலேயே கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அதாவது, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 10இலட்சம் ரூபாயும் அரசு நிதியில் இருந்து தலா 15இலட்சம் ரூபாயும்  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பணியின்போது காயமடைந்த கல்யான்குமார், சின்னக்கருப்பு ஆகிய இரு வீரர்களும் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன். காயமடைந்த இருவருக்கும் தலா 3 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். அவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் பழனிசாமி  குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.