வெளிநாடுகளில் இருந்து மேலும் 128 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

 


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 128 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி சீனா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து இலங்கை தூதரக அதிகாரிகள் உட்பட மொத்தம் 128 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி சீனாவின் ஷாங்காயிலிருந்து ஐந்து இலங்கையர்களும் டுபாயிலிருந்து 59 இலங்கையர்களும் நேற்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அத்துடன் கட்டார், தோஹாவிலிருந்து 39 இலங்கையர்களும் டுபாயிலிருந்து 25 இலங்கையர்களும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை இலங்கை தூதரக அதிகாரிகளும் டுபாயிலிருந்தும் கட்டாரிலிருந்தும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் கொழும்பில் அமைந்துள்ள நவலோக மற்றும் லங்கா தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர்.சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னர் அவர்கள் அனைவரும் நீர்கொழும்பில் அமைந்துள்ள சுற்றலா ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.