தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 


தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று (புதன்கிழமை) முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை ஆரம்பமாகி இரண்டு வாரங்களாகும் நிலையில் மூன்று நாட்களாக வறண்ட வானிலை நிலவியது.கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் மழை குறைந்து வறண்ட வானிலை நிலவியதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது.

இந்நிலையில்  இன்று முதல் 4 நாட்களுக்கு சென்னை முதல் தென்காசி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை மைய இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் முழுதும்  இன்று முதல் 14ம் திகதி வரை பரவலாக இடி,  மின்னலுக்கு வாய்ப்புள்ளது.

தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, திருவள்ளூர்,  செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழையும்  மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யலாம்.

கனமழை பெய்தால்  வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள  வருவாய் துறை மற்றும் பொதுப்பணி துறையினருக்கும்  வானிலை மையம் தகவல் அனுப்பியுள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில்  இன்று மணிக்கு  40 முதல் 50 கி.மீ  வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம்.  எனவே  மீனவர்கள்அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என” எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.