இந்தியாவில் பாடசாலைகள் திறப்பு ஒத்திவைப்பு!!
தமிழகத்தில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறது. வருகிற 16ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு இரத்து செய்யப்படுகிறது. சூழ்நிலைக்கேற்ப பாடசாலைகளை திறப்பது குறித்த திகதி அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் online மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இருப்பினும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் விரும்பிய உயர்கல்வியை பெறுவதற்கு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவது அவசியம். எனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 16 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் பாடசாலைகள் திறக்கப்படுமா என்பது குறித்த அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை