இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 80 இலட்சத்தை கடந்துள்ளது.

இதன்படி மொத்தமாக 80 இலட்சத்து 64 ஆயிரத்து 548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 4 இலட்சத்து 91 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை நேற்று (புதன்கிழமை) புதிதாக 48 ஆயிரத்து 285 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 86 இலட்சத்து 84 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 550 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 28 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.