நிவர் புயல் முழுமையாக கரையைக் கடந்தது!

 


நிவர் புயல் முழுவதுமாக கரையைக கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய நேரப்படி இன்று (வியாழக்கிழமை) காலை நான்கு மணியளவில் புயல் முழுவதுமாக கரையைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிவர் அதிதீவிர புயல் வலுவிழந்து தீவிரப் புயலாக நிலப்பகுதியில் இருக்கிறது எனவும் அடுத்த சில மணி நேரங்களில் தீவிரப் புயல் வலுவிழந்து புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் நேற்று இரவு 11.30 மணிமுதல் இன்று அதிகாலை நான்கு மணிக்குள் நிவர் புயல் முழுவதுமாக கரையைக் கடந்துவிட்டது என தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், 100 சதவீதம் பாதுகாப்புடன் புயலைக் கடந்திருக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று வடதமிழகத்தில் மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.