கொரோனாவால் உலகளவில் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!


உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ஆறு கோடி ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 26ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர, தற்போதுவரை நான்கு கோடியே 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

அமெரிக்காவில் இதுவரை வைரஸ் தொற்றினால் ஒரு கோடியே 31இலட்சத்து 37ஆயிரத்து 962பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இரண்டு இலட்சத்து 68ஆயிரத்து 219பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.