அகமதாபாத்தில் 57 மணிநேர ஊரடங்கு உத்தரவு!

 


அபாயகரமான அளவில் கொரோனா தொற்று பரவுவதால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 57 மணி நேர தொடர்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணி முதல் வரும் 23 ஆம் திகதி காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ரவி குமார் குப்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஊரடங்கு நேரத்தில் பால் மற்றும் மருந்து விற்பனை கடைகள் மட்டுமே திறந்து செயற்பட அனுமதி வழங்கப்படும்.

அத்துடன் அகமதாபாத் நகரில் மறு அறிவிப்பு வரும் வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கும் அமுலில் இருக்கும்” என அறிவித்துள்ளார்.

இந்த மாத துவக்கத்தில் இருந்து அகமதாபாத் நகரில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.