உத்தரப்பிரதேச வாகன விபத்தில் 14 பேர் உயிரிழப்பு!


உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் சரக்கு லொறி ஒன்றுடன் காரொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த விபத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.