கட்டுப்பாடுகளை மீறியவர்களை காட்டிக் கொடுத்த ட்ரோன் கமரா


ட்ரோன் கமராக்களின் உதவியுடன் தனிமைப்படுத்தல் பகுதிகளில் உத்தரவுகளை மீறி நடமாடிய 117 சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படும் வரை ட்ரோன் கமராக்களின் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறிய குற்றச்சாட்டுக்காக 46 நபர்கள் நேற்று மாத்திரம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இவ்வாறான குற்றச்சாடடுக்காக 358 நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன மேலும் கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.