ஆற்றில் விழுந்து ஒருவர் மரணம்!


ஏறாவூர், திகிலிவெட்டை ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் மரணித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 8 பிள்ளைகளின் தந்தையான திகிலிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து உதயச் சந்திரன் (வயது 51) என்பவரே பலியாகியுள்ளார்.

குறித்த நபர் மாவடிமுனையிலிருந்து, முறக்கொட்டாஞ்சேனை ஊருக்கு செல்லும் நோக்கில் திகிலிவெட்டை ஆற்றை தோணியின் மூலம் கடந்து கொண்டிருக்கும்போது தோணி கவிழ்ந்துள்ளது.

இதன்போது குறித்த நபர் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருப்பதை அவதானித்த அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக அவரைக் காப்பாற்றும் நோக்கில் விரைந்துள்ளனர்.

எனினும் அவர்களால் அவரது சடலத்தையே மீட்க முடிந்துள்ளது.

சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.