ஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள செய்தி!!

 


எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி நாட்டை மூடி வைப்பதற்கான எண்ணம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இல்லை என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தி, அனைத்து மக்கள் கொரோனா தொற்றாமல் செயற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்படுவதன் மூலம் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த முடியும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் நிலைமைக்கமைய திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு பின்னர் மேல் மாகணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் அவசியம் எனவும், தினசரி சம்பளத்தில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் நாட்டை திறந்த பின்னர் பொது மக்கள் கொரோனா தொற்றாத வகையிலும், வைரஸ் பரப்பாத நபராகவும் பொறுப்புடன் செய்பட வேண்டும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை உரிய முறையில் பிற்பற்றினால் வைரஸிடம் இருந்து தப்பி விடலாம் என அவர் சுட்டிக்காட்டியு்ளளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.