மாங்குளம் பகுதியில் பருத்துறையை சேர்ந்த குடும்பஸ்த்தர் பலி!!


 முல்லைத்தீவு - மாங்குளம் 1ம் கட்டை பகுதியில் காட்டுயானை தாக்கியதில் யாழ்.பருத்துறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் புனிதநகர் சந்தி கற்கோவளம் பருத்துறையை சேர்ந்த ஆனந்தராசா விஜயானந்தம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

கூலித்தொழில் செய்துவரும் இவர் தொழில் முடிந்து மாங்குளம் மல்லாவி வீதி 1 ஆம் கட்டை பகுதியில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தவேளை யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து உயிரிழந்த இவரின் உடலம் மாங்குளம் பொலீசாரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.