வடக்கின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
வங்களா விரிகுடாவில் உருவாகியிருக்கும் தாழமுக்கம் புயலாக மாறியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் இரு நாட்கள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
“நிவாட்” என ஈரான் நாட்டினால் பெயரிடப்பட்டுள்ள குறித்த புயல் இன்று இரவு புல்மோட்டைக்கு எதிரே தரை நோக்கி நகரும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 24ம், 25ம் திகதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நாட்களில் வடகிழக்கு மாகாணங்களில் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றராக இருக்கும் எனவும் சுமார் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பெய்யும் எனவும்
பொதுமக்கள், மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை