பொலிஸுக்கு வார விடுமுறை வழங்கப்பட்டமைக்கு கமல் பாராட்டு!
சென்னை தவிர்த்து மாநிலத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வார விடுமுறை வழங்குவது தொடர்பான தமிழ்நாடு அரசின் முடிவுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஏனை அரசு ஊழியர்களைப் போல் பொலிஸ் துறையினருக்கும் சுழற்சி முறையில் ஓய்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட நேர வரையறையின்றி கடமையைச் செய்யும் பொலிஸாருக்கு ஓய்வு எடுக்கும் உரிமை உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை