இறுதிப் போட்டிக்கு தெரிவானது மும்பை அணி!!

 


2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, 57 ஓட்டங்களால் டெல்லி கப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

இந்தப் போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது,

இதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக, கிசான் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் யாதவ் 51 ஓட்டங்களையும், டி ஹொக் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அத்துடன், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 05 ஆறு ஓட்டங்களுடன் 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் பதிலுக்கு 201 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியின் முன்னிலை வீரர்கள் மூவர் அடுத்தடுத்து ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் தடுமாறிய டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 57 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அணிசார்பாக மார்கஸ் ஸ்ரொய்னிஸ் 65 ஓட்டங்களையும் அக்ஸர் பட்டேல் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், பும்ரா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் போல்ற் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள வெளியேற்றச் சுற்றுப்போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.