இலங்கைக்கு நன்கொடை வழங்கிய வெளிநாடு!!
கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பங்களிப்புச்செய்யும் நோக்கில் 80 மில்லியன் ரூபா பெறுமதியான 50 செயற்கை சுவாசக்கருவிகளை சிங்கப்பூர் நன்கொடையாக வழங்கியிருக்கிறது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஆரம்பத்திலிருந்தே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் அமைப்புக்களும் சுகாதார அமைச்சிற்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.
அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரின் "டீம்செக்" நிறுவனத்தினால் 80 மில்லியன் ரூபா பெறுமதியான 50 செயற்கை சுவாசக்கருவிகள் சுகாதார அமைச்சிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த சுவாசக்கருவிகள் அவுஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும்.
இதனைப் பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் சுவாசப்பிரச்சினைகளை எதிர்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை