தமிழர்களின் இடங்கள் பறிபோகிறது!!

 


தமிழ் மக்களின் இப்பரம்பலை அழிப்பதற்காக திட்டமிட்டு தமிழ் மக்களின் காணிகள் சூறையாடப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழரின் பூர்விக இடங்களான மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் அதிகளவான காணி அபகரிப்புகளும், சிங்கள குடியேற்றம், கலப்பு திருமணம் போன்ற வெளிப்படியான காரணிகளும், எண்ணற்ற மறைமுக காரணிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இன்றுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி அபகரிப்பு தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டுள்ளது.

கடந்த மாதமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு, மாதனை பிரதேசங்களில் இடம்பெறும் காணி அபகரிப்பு பற்றித் தட்டிக் கேட்ட மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கொழும்பிற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டார்.

இதேவேளை,மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி பி (B) வலயத்தில் வெளியாறுக்கு காணிகள் அபகரிக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுவது தமிழ் மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் செயற்பாடுகளே தொடர்ச்சியாக இடம்பெறுவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் சுட்டிக்காட்டியுருந்தார்.

தற்போது,மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புன்னைக்குடா,களுவன்கேணி பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான 340 ஏக்கர் காணிகளை சிலர் அபகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மூன்று நாட்களாக பெக்கோ இயந்திரங்களைக் கொண்டு மிகப் பெறுமதியான பனை மரங்கள் அழிக்கப்பட்டு மேற்படி காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

நபர் ஒருவரிடம் இருந்து காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு பெறப்பட்ட மேற்படி காணிகள் அரசாங்கத்திற்கு சொந்தமானவை.

ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைவரும் அச்சத்தில் இருக்கும் நிலையில் மிகவும் இரகசியமான முறையில் இந்த காணிகளை அபகரிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு ஆணையாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என பலரும் கேள்வியெழுப்புகின்றனர்.

அத்தோடு, வடமாகாணத்தில் யாழ்ப்பாணம்- நெடுந்தீவுப் பகுதிக்கு பயணித்த தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர் மற்றும் பெளத்த துறவிகள் அடங்கிய குழுவினர் வெடியரசன் கோட்டையை அபகரிக்கும் நோக்கில் இரகசிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையென்பது தமிழ் பௌத்த அரசன் வாழ்ந்த இடம் என இவர்கள் கருத்துரைத்ததோடு, யாழ்ப்பாணம் விகாரதிபதியும் உடன் பயணித்து அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு அப்பகுதியின் நில உரிமை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உரித்து தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது அப்பகுதிகளை படமாக்கியதுடன் அப்பிரதேசத்தினையும் அதன் அண்டிய பகுதிகளையும் ரோன் கமராவின் உதவி கொண்டும் நீண்ட நேரம் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் காரணமாக வெடியரசன் கோட்டைப் பகுதியினை பௌத்த சின்னமாக காண்பித்து ஆக்கிரமிக்கவோ அல்லது அப் பகுதியிலும் ஓர் விகாரையை அமைத்து நெடுந்தீவினையும் சிங்கள மயமாக்கும் முயற்சி இடம்பெறுகின்றதா? என அச்சம் தெரிவிக்கப்படுகிறது .

இவ்வாறு தமிழ் மக்களின் பாரம்பரிய தொல்லியல் ஆதாரங்கள், சிதைவுகள்,தமிழரின் பூர்விக இடங்கள், தமிழர் மரபு என அனைத்தும் மக்களிடமிருந்து பறிபோய்க் கொண்டுள்ளன.

இலங்கை படையினரின் ஒத்துழைப்புடன் இவை அனைத்தும் அரங்கேறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.