நிகரகுவாவில் இருந்து என்பதாயிரம் மக்கள் வெளியேற்றம்!

 


அயோட்டா புயல் அச்சம் காரணமாக நிகரகுவாவில் இருந்து என்பதாயிரம் மக்கள் வெளியேறி வருகின்றனர்.

அயோட்டா புயல் நெருங்கி வருகின்ற நிலையில், உலக உணவுத் திட்டம் எச்சரித்தை தொடர்ந்து என்பதாயிரம் மக்களை இடமாற்றம் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

ஐந்தாவது வகைப் புயலாக உருமாறியுள்ள அயோட்டா புயல், கொலம்பிய தீவுகளான சான் ஆண்ட்ரஸ் மற்றும் ப்ராவிடென்சியா ஆகியவற்றைக் கடந்துள்ளது.

தற்போது கரீபியன் நாடுகளில் ஒன்றான நிகராகுவாவின் கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சூறாவளி நிலை கொண்டுள்ளது.

இந்நிலையில், நிகரகுவாவில் சுமார் என்பதாயிரம் பேர் அயோட்டா புயலால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளதால், அவர்களை வெளியேற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.