சில நாடுகளின் இலாபத்திற்காக உலகம் பாதிக்கப்படக்கூடாது!


சில நாடுகளின் இலாபத்திற்காக உலகம் ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாதென இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை மறைமுகமாக கண்டித்து, பன்னாட்டு இணைய கருத்தரங்கில் ‘காணொளி கான்பரன்ஸ்’ வாயிலாக உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் கூறியுள்ளதாவது,  “இந்திய – பசிபிக் கடல் பிராந்தியக் கொள்கை என்பது எதிர்காலத்திற்கானது. அதனை முந்தைய காலகட்டத்திற்கு தள்ளக் கூடாது.

இதேவேளை பனிப் போரை விரும்பும் நாடுகள்தான் அத்தகைய பிற்போக்கான எண்ணத்தை விரும்பும். சமீப காலத்தில் இந்திய – பசிபிக் மற்றும்  ஆசிய அமைப்புகள் குறிப்பிடத்தக்க வரவேற்பையும் முன்னேற்றத்தையும் அடைந்து வருகின்றன.

ஒரு சில நாடுகளின் இலாபத்திற்காக சர்வதேச நாடுகள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் இந்திய – பசிபிக் கடல் பிராந்தியக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.