மண்டைதீவில் இரு சிறுவர்கள் பரிதாப மரணம்!


யாழ்ப்பாணம், மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சோகச் சம்பவம் இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

மண்டைதீவைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) மற்றும் சார்வின் (வயது-5) ஆகிய சகோதரர்களே நீர் சேமிப்புப் கிடங்கினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சிறுவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.