குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடும் ரம்பா!!

 


கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா என்பதும் அதன் பின்னர் அவர் கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவிலேயே செட்டிலாகி விட்டார் என்பதும் தெரிந்ததே. ரம்பா-இந்திரகுமார் தம்பதிகளுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம் கொண்டாடிய வீடியோ கட்சிக்ளை சமூக வலைத்தளத்தில் ரம்பாவின் கணவர் பதிவு செய்துள்ளார்


அந்த வீடியோவில் ரம்பாவின் குழந்தைகள் குறிப்பாக மூன்றாவது குழந்தையை கையில் கம்பி மத்தாப்பு வைத்துக்கொண்டு சுற்றி சுற்றி வரும் காட்சிகள் க்யூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்


நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம் கொண்டாடிய வீடியோக்கள் அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது என்பதும் நெட்டிசன்கள் இந்த வீடியோக்களுக்கு பாசிட்டிவ் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.