உணவுக்காக வீதிகளில் அலைந்து திரியும் மான் கூட்டங்கள்!
திருகோணமலை நகர சபைக்குட்பட்ட பகுதியில் மான் கூட்டங்கள் உணவுக்காக அலைந்து திரிந்து வருகின்றன.
இம்மாவட்டத்தின் கோணேஸ்வரா கோவிலை அண்டிய பகுதியில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் மான் கூட்டங்களுக்குத் தங்குமிட வசதிகள் மற்றும் உணவுகள் இன்றி வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் படுத்துறங்கி வருகின்றன.
அதேபோன்று உணவுக்காகத் திருகோணமலை சிறைச்சாலையை அண்டிய பகுதியில் மான் கூட்டங்கள் பொலித்தீன் உரைகள் மற்றும் கழிவுகளையும் உண்டு வருகின்றன.
திருகோணமலை நகர சபைக்குட்பட்ட பகுதியிலே அதிகளவான மான்கள் காணப்படுகின்றன.
மான்களுக்கான சிறந்த பராமரிப்புகள் மற்றும் உணவுகள் இன்மையால் வீதியைக் கடக்க முற்படுகின்ற போதும் அதேபோன்று பொலித்தீன் பைகளை உண்ணுகின்ற மான்களும் வருடத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட மான்கள் இறந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா காலமாகையால் உணவுக்கு மான்கள் அலைந்து திரிவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
திருகோணமலை நகர சபையினால் மான்களைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை