ஷஹ்ரானின் மனைவி குறித்து சிஐடி விசாரணை!


 மறியலிலுள்ள பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிம் மனைவி அப்துல் காதர் ஹாதியாவின் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட சஜித் அணி எம்பி எரான் விக்ரமரத்னவிடம் சிஐடியினர் இன்று (16) வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஷஹ்ரான் மனைவியின் பாதுகாப்பு குறித்து பேசியமை தொடர்பில் எரானுக்கு சிஐடி அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இன்று அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

காவலில் உள்ள சாட்சிகளை, சந்தேக நபர்களை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் பொறுப்பு குறித்தே தான் பேசியதாக சிஐடியிடம் எரான் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.