வவுனியா மரக்கடத்தல் முறியடிப்பு!


 வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  குருக்களூர் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்டவிருந்த முதிரை மரக்குற்றிகள், அறுக்கப்பட்ட முதிரை பலகைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் என்பன பூவரசங்குளம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பெற்றப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப்பகுதியில் முதிரைமரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக  பூவரசங்குளம்  விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து  நேற்று(16) இரவு  அப்பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் விசேட அதிரடிப்படையினர் குறித்த மரக்கடத்தல்காரர்களை மடக்கி பிடிக்க சென்றபோது   குறித்த மரங்கடத்தல் காரர்கள் வாகனத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளனர். 

குறித்த சம்பவத்தில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 09  முதிரை  மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றபட்ட முதிரை குற்றிகள் மற்றும் வாகனம் வவுனியா பூவரசங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பூவரசங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.