கொரோனாவால் உலகளவிலான பாதிப்பு ஐந்து கோடியை கடந்தது!!


கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் உலக அளவிலான பாதிப்பு ஐந்து கோடியைன் கடந்துள்ளது.

இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக ஐந்து கோடியே 68 ஆயிரத்து 493 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்து 54 ஆயிரத்து 411ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட ஐந்து கோடி பேரில் இதுவரை மூன்று கோடியே 54 இலட்சத்து 80ஆயிரத்து 358 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும், ஒரு கோடியே 33 இலட்சத்து 33ஆயிரத்து 720 பேர் தற்போது வரையான நிலைவரப்படி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, தற்போது உலக அளவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளில் ஆறு இலட்சத்தைத் தாண்டி பதிவாகின்றமையால் பாதிப்பு எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதுடன் அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது. அங்கு இதுவரை இரண்டு இலட்சத்து 43ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணித்துள்ளனர்.

இதையடுத்து, இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளதுடன் அங்கு இதுவரை 85 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு இலட்சத்து 26ஆயிரம் பேர் மரணித்துள்ளனர்.

மூன்றாவது நாடான பிரேஸிலில் 56 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை ஒரு இலட்சத்து 62 ஆயிரம் பேர் மரணித்துள்ளனர்.

இதையடுத்து, ரஷ்யா, பிரான்ஸ், ஸ்பெயின், ஆர்ஜென்ரீனா, பிரித்தானியா, கொலம்பியா, மெக்ஸிகோ, பெரு, இத்தாலி ஆகியன நாடுகள் அடுத்தடுத்து பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்ட நாடுகளாக உள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.