யாழில் வாள்களுடன் சிக்கிய இளைஞர்கள்!


 யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோப்பாய் கோண்டாவில் பகுதியில் நேற்றைய (3) தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது உந்துருளியில் பயணித்த இவருரை திடீரென சோதனைக்கு உட்படுத்திய போதே அவர்களிடம் கைக்குண்டு மற்றும் வாள் ஆகியன காணப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பயணித்த உந்துருளியும் கூரிய ஆயுதங்களை காண்பித்து அச்சுறுத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.