கொரோனாவால் மூவர் சாவு!


 இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (16) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்தவர்களின் விபரங்கள்,

மொரட்டுவையை சேர்ந்த 81 வயது மூதாட்டி அவரது வீட்டில் மரணம்.

கொழும்பு 10ஐ சேர்ந்த 70 வயது முதியவர் ஐடிச் வைச்சியசாலையில் மரணம்.

கொழும்பு 13ஐ சேர்ந்த 75 வயது முதியவர் தேசிய வைத்தியசாலையில் மரணம்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 61 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட இருவர் இதுவரை தற்கொலை மற்றும் விபத்து காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.