பொலிஸ்மா அதிபர் – பிரதமர் இடையே சந்திப்பு!!
புதிய பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன, பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று(30) சந்தித்துள்ளார்.
கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் புதிய பொலிஸ்மா அதிபரின் உத்தியோகப்பூர்வ சந்திப்பாக இது அமைந்துள்ளது.
19 மாதங்களாக பதில் பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய சீ.டி. விக்ரமரத்ன, பொலிஸ்மா அதிபராக கடந்த 27ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றார்.
கருத்துகள் இல்லை