துருக்கி சிகரெட் போதைப்பொருளுடன் சிக்கிய யுவதி!


 வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் துருக்கி நாட்டு சிக்கிரட் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளும் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரிவில் சட்டவிரோத நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு சட்டவிரோத நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கமைய சட்டவிரோதமான துருக்கி நாட்டு சிக்கிரட் விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட நடவடிக்னையின் போது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து துருக்கி நாட்டு 800 சிக்கிரட் மற்றும் 40 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம்.துசிதகுமார தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜி.ஐ.புஸ்பகுமார, எஸ்.வாசல, எஸ்.பிரேமசிறி, எம்.ரவிந்திர ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சட்டவிரோத செயல்கள் பிடிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத செயல்கள் இடம்பெற்று வரும் நிலையில், போதைப் பொருள் பாவனையினை இல்லாமல் செய்வதற்காக வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.சி.என்.ஜயசுந்தர வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.