கண்டி நகரின் அனைத்து பாடசாலைகளும் மூடல்!


 கண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுகின்றன.

நாளை (26) முதல் டிசம்பர் மாதம் 4ம் திகதி வரை கண்டி நகர் எல்லைக்குள் உள்ள 45 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்தார்.

கண்டியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.