குருநாகல் மாவட்ட தபால் நிலையங்ள் மீள் அறிவித்தல் வரை பூட்டு!


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களையும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, குருநாகல் பிரதேசத்தின் தபால் அதிகாரியின் அலுவலகம் மற்றும் குருநாகல் பிரதான தபால் காரியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றும் 14 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதன் காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குருநாகல் தபால் அதிகாரி காரியாலயத்தில் அண்மையில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதியானது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் குறித்த 14 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.