பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் ஆயிரம் ரூபாய் சம்பளம் – பிரதமர்!!

 


பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இதில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாய் வரையில் உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளம் தீர்மானிக்கப்பட்டு வருகிறது.

இதனை வரவு செலவுத் திிட்டத்தின் ஊடாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில்,  இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.