யாழில் பொலிசாரின் மற்றொரு சர்ச்சை கோரிக்கை!
மாவீரர் தினத்தில் கார்த்திகை பூவை காட்சிப்படுத்துவதை தடைசெய்யுமாறு பொலிசார் சார்பில் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவீரர்தினத்தில் உயிரிழந்தவர்களிற்கான அஞ்சலி நிகழ்வை நடத்தக்கூடாதென 38 பேருக்கு தடைஉத்தரவு பிறப்பிக்க கோரி யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிசார் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணை யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.
இந்த விசாரணை நேற்று இடம்பெற்றாபோது, நினைவேந்தல் நிகழ்விற்கு தடைவிதிப்பதுடன், புலிகளின் சின்னங்களை காட்சிப்படுத்துவதையும் தடைசெய்யுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.
இதன் போது, கார்த்திகை பூவை காட்சிப்படுத்துவதையும் தடைசெய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
எனினும் இது தொடர்பில் தமிழர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் யாரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லையெனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை