பசுமைக் கட்சியுடன் அரசாங்கத்தை உருவாக்கும் ஆர்டெர்ன்!!


 நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பசுமைக் கட்சியுடன் அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.


கடந்த மாத தொடக்கத்தில் இடம்பெற்ற பொது தேர்தலில் வெற்றியை பெற்ற தொழிலாளர் கட்சி, ஆட்சிக்கு மற்ற கட்சிகளின் ஆதரவு தேவையில்லை என்றாலும், கட்சிகள் ஒருமித்த கருத்தை உருவாக்க முற்படுவதால் கூட்டணிகள் அமைப்பது என்பது நியூசிலாந்தில் வழக்கமான ஒன்றாக காணப்படுகின்றது.


புதிய அரசாங்கம் திங்களன்று அறிவிக்கப்படும் என ஆர்டெர்ன் சனிக்கிழமையன்று அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள கூட்டணி காரணமாக பசுமைக் கட்சிக்கு இரண்டு அமைச்சு பதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், பசுமைவாதிகள் தங்கள் அமைச்சின் மூலம் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசாங்கத்தை ஆதரிக்க கடமைப்பட்டுள்ளனர், ஆனால் தொழிற்கட்சிக்கு வேறுபட்ட நிலைப்பாட்டை எடுக்க உரிமை உண்டு என கூறினார்.


இதேவேளை “எங்களுக்கு ஒரு நல்ல ஆணை இருப்பதில் நான் மீண்டும் பெருமைப்படுகிறேன், ஏனென்றால் இது ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தமாகும், இது பசுமைவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்” என பசுமைக் கட்சியின் பிரதி தலைவர் மராமா டேவிட்சன் கூறினார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.