குயின்லாந்துக்குள் நுழைவதற்கான தடை நீடிப்பு!!

 


கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட குயின்லாந்து எல்லைப்பகுதிகளுக்கான தடை நீடிக்கப்படும் என குயின்லாந்து பிரதமர் அறிவித்துள்ளார்.


அவுஸ்ரேலியாவின் மாகாணமான குயின்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் நேற்று முன்தினம் மூன்றாவது தடவையாக வெற்றிபெற்ற அவர் இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.


அதனடிப்படையில் அவுஸ்ரேலியாவின் பிரதான நகரங்களான சிட்னி, விக்டோரியா, மற்றும் மெல்போர்ன் உள்ளிட்ட சில நகரங்களில் இருந்து குயின்லாந்து வருவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கப்படுகிறது.


இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், குறித்த தடை நடவடிக்கையானது இம்மாத இறுதியில் மீளப் புதுப்பிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.


நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்நாட்டு எல்லைப்பகுதிகளுக்கிடையிலான தடைகளை மீளப்பெறுமாறு அவுஸ்ரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், குறித்த தடை குயின்லாந்தில் தொடர்ந்தும் நீடிக்கப்படுகிறது.


இந்நிலையில், குறித்த நகர்ப்பகுதிகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையானது, அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் மற்றும் குயின்லாந்து பிரதமர் ஆகியோருக்கிடையில் முறுகலை ஏற்படுத்தியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.