கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் கைது!


 கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடுபுகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து திருட்டு நகைகள் 7 பவுண் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“வீடுகளில் உள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த போது, பட்டப்பகலில் வீடுகளை உடைத்து நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழான மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது. இதன்படி நாவற்குழி மற்றும் யாழ்ப்பாணம் புகையிர நிலைய வீதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்” என்றும் பொலிஸார் கூறினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.