சொக்லேற் கனவுகள் 1 - கோபிகை!!

 


அவனும் அவளும்

எலியும் பூனையும்....

அவன் வேணும் என்றால் 

அவள் வேண்டாம் என்பாள்.

அவள் வேண்டும் என்றால்

அவன் வேண்டாம் என்பான்.


அவன் அன்னையிடம் அவன்

கொஞ்சிப்பேசினால் கூட

அவளுக்குப் பிடிக்காது, 

அதே மாதிரி

அவளுடைய அன்னையிடம்

அவன் தான் அதிக உரிமை 

எடுத்துக்கொள்வான். 


அவளுடைய தந்தை 

அவனுக்குத் தாய் மாமன்....

அவனுடைய தந்தை 

அவளுக்குத் தாய் மாமன்.....


ஒரே கல்லூரியில் 

ஒரே பிரிவில்.....

அவளுடைய நண்பியிடம் 

அவன் கடலை போட,

அவனுடைய நண்பனிடம்

அவள் கடலை போடுவாள்.....


இருவரும் கற்றது

உயிரியல் பிரிவில்...

அவன் வைத்தியராக...

அவளோ உயிரிலை 

அவன் படிக்கிறானே என்பதற்காக....


'எரும...மெல்லப்போடி,

நானும் வரணும்' .....

அவன் சொன்னால் 

அதிக வேகமாய் 

சைக்கிளை மிதிப்பாள்

வேண்டுமென்றே.....


'இரு...இரு....எனக்கும் 

ஒரு நாள் வராமலா போயிடும்,'

அவன் மனதிற்குள் பொரிய

 நாக்கை உருட்டி 

நக்கலாய் சிரிப்பாள் அவள்....


சின்ன வயது முதலே

அவளுக்கு துணையும்

அவளுக்குத் தோழனும்

அவன் தான்....


கனவுகள் தொடரும்...


கோபிகை



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.