தேவாலயங்களில் தாக்குதல் நடக்குமென போலி தகவல்!
தேவாலயங்களில் தாக்குதல்கள் நடக்கவுள்ளதாக வட்ஸ்அப் ஊடாக போலி தகவல்களை பகிர்ந்த கம்பஹா – வெலிகம்பிட்டியை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று முன் தினம் (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தானையில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேவாலயங்களில் தாக்குதல் நடக்கவுள்ளது எனவே ஞாயிறு ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டாமென்ற குறுந்தகவல்கள் இவரால் ஏனையோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை