கொண்டாட்டங்களையும், விருந்துபசாரங்களையும் தவிர்க்கவும்!!


 எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் முடிந்த அளவுக்கு கொண்டாட்டங்களையும், விருந்துபசாரங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் கொவிட் 19 நோய்த்தொற்று பரவுகின்ற அபாயம் அதிகமாக இருக்கிறது.

எனவே ஒன்று கூடுவது, உறவினர்களுடன் வீடுகளுக்கு செல்வது, விருந்துபசாரங்கள் போன்றவற்றை தவிர்த்து கூடுமானவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.