கொரோனா உருவானது எப்படி ?
உலகில் கொரோன வைரஸ் எவ்வாறு உருவானது என்பதை கண்டுபிடித்து உறுதி செய்வதற்காக உரிய விசாரணைகள் இடம்பெற வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கந்தான சென் செபஸ்டியன் தேவாலயத்தில் இன்று (25) இடம்பெற்ற கிறிஸ்மஸ் ஆராதனையின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகலாவிய தொற்று தானாக உருவானது என மக்கள் கருதமுடியாது.
பொருளாதார வளம் என்பது சமூகத்தின் சிறிய குழுவினரின் கரங்களிலேயே காணப்படுகின்றது. கொரோனா வைரஸ் வறிய மக்களை மோசமாக பாதித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை