யாழில் 26 பேருக்கு கொரோனா!


 மருதனார்மடம் சந்தையில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது யாழ் போதனாசாலை ஆய்வு கூட பரிசோதனையில் உறுதியானது என இன்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தெல்லிப்பழை 3, ஏழாலை 3, அளவெட்டி 2, கீரிமலை 2, மானிப்பாய் 2, உடுவில் 2, இனுவில் 2, சுன்னாகம் 2 பேருக்கும், கொக்குவில், உரும்பிராய், நவாலி, சங்கானை, பண்டத்தரிப்பு, கைதடி, காங்கேசன்துறை, சன்டிலிப்பாய் ஆகிய பகுதிகளில் தலா ஒவ்வொருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று கொரோனா பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 104 பேருக்கு மீளவும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதியானதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.