ஒரேநாளில் 878 பேருக்கு தொற்று!

 


கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி அல்லது இரண்டாம் அலை காரணமாக இன்று (02) இதுவரை 878 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரேநாளில் கூடிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். முன்னர் ஒக்டோபர் 23ம் திகதி 866 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 21,857 ஆக உயர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.